உள்நாட்டு செய்திகள்

நாளை மேடையேறுகிறார் கோட்டா!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கன்னி  மாநாடு நாளை (11) மாலை 3 மணிக்கு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் , மைத்திரியின் ஆலோசனையைமீறி சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இம்மாநாட்டின்போது பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை ஏற்கவுள்ள மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதையும் அறிவிக்கவுள்ளார்.

அதேவேளை, கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரென கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

 

கருத்து தெரிவிக்க