உள்நாட்டு செய்திகள்புதியவை

குருநாகல் நகர மேயருக்கு விளக்கமறியல்

குருநாகல் நகர மேயர் துஷாரா சஞ்சீவவுக்கு செப்டம்பர் 17 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு துப்பாக்கி முனையில் நபர் ஒருவரை அச்சுறுத்தி கொள்ளையடித்ததற்காக அவர் கைது செய்யப்பட்டிருதார்.

இந்நிலையில் இன்று குருநாகல் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த குறித்த வழக்கில் முதல் சந்தேக நபராக சட்டமா அதிபர் மேயரை நியமித்துள்ளார்.

இந்த வழக்கில் மேலும் 3 பேர் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாததால் சந்தேக நபருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க