உள்நாட்டு செய்திகள்புதியவை

ரத்கம கொலை: சந்தேக நபர் ஒருவருக்கு வலைவிரிக்கும் காவல்துறை

இந்த ஆண்டு தொடக்கத்தில் ரத்கமவில் கொல்லப்பட்ட இரண்டு தொழிலதிபர்கள் வழக்கில் மேலும் ஒரு நபர் கைது செய்யப்படவில்லை என குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

காலி நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல முன் நடத்தப்பட்ட விசாரணையின்போது, குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் ரத்கம பகுதியில் இருந்து தப்பிச் சென்றதாக நம்பப்படுவதாக சிஐடி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்த கொலைகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட 17 சந்தேக நபர்கள் ஓகஸ்ட் 19 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் 15 பேர்  தெற்கு காவல்துறை விசேட விசாரணை பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க