உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா பொதுஜனவின் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்றது

இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு உண்ணாப்புலவு பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுடனேயே குறித்த கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.

பொதுஜன பெரமுன கட்சியின் உடைய முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துஷார அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயந்த கோதாகொட மற்றும் சுசந்த புஞ்சிநிலமே ஆகியவர்களும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் மற்றும் பொது ஜனபெரமுன கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவின் பல இடங்களிலும் மக்கள் சந்திப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

எதிர்வருகின்ற தேர்தல் தொடர்பாகவே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க