உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் உடன் அமுலாகும் வகையில் நீர் வெட்டு

மட்டக்களப்பு பிராந்தியத்தில் மறு அறிவித்தல் வரும் வரை பின்வரும் நீர் விநியோக திட்டங்களில் உடன் அமுலாகும் வகையில் நீர் வெட்டு குறிப்பிட்ட மணித்தியாலங்களில் அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் வியாழக்கிழமை (01) தெரிவித்துள்ளார்.

தொடர் வரட்சியான காலநிலை நிலவுவதனால் இப்பிராந்தியத்திற்கு பிரதானமாக குடிநீரை வழங்கும் உன்னிச்சை குளத்தினது நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவதோடு, இன்னும் ஒரு மாதத்திற்கு விநியோகிக்க தேவையான நீரே காணப்படுவதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுணதீவு நீர் வழங்கல் திட்டத்தில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மற்றும் இரவு 10.00 மணி தொடக்கம் காலை 04.00 மணி வரையும் செங்கலடி மற்றும் பகுதியில் வாழைச்சேனை காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மற்றும் இரவு 10.00 மணி தொடக்கம் காலை 05.00 மணி வரையும், ஏறாவூர் பகுதியில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மற்றும் இரவு 11.00 மணி தொடக்கம் காலை 05.00 மணி வரையும், ஆரையம்பதி பகுதியில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 04.00 மற்றும் இரவு 10.00 மணி தொடக்கம் காலை 05.00 மணி வரையும், காத்தான்குடி பகுதியில் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மற்றும் இரவு 10.00 மணி தொடக்கம் காலை 04.00 மணி வரையும், கல்லடி பகுதியில் காலை 09.00 மணி தொடக்கம் பகல் 12.00 மற்றும் இரவு 10.00 மணி தொடக்கம் காலை 06.00 மணி வரையும், இருதயபுரம் பகுதியில் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மற்றும் இரவு 10.00 மணி தொடக்கம் காலை 04.00 மணி வரையும் தினமும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேவேளை களுவஞ்சிகுடி, மண்டூர் மற்றும் கல்லாறு போன்ற நீர் விநியோக திட்டங்களில் மேற்படி நீர் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது எனவும், நீர் வெட்டு அமுலாகும் நீர் வழங்கல் திட்டங்களிலுள்ள பாவனையாளர்கள் நீரினை சேமித்து விரையமின்றி பாவிக்குமாறும் பிராந்திய முகாமையாளர் மேலும் கேட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க