உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

“வடக்கு இளைஞர்களே 2 மாதங்கள் பொறுமையாக இருங்கள்’- மகிந்தானந்த

வடக்கில் உள்ள இளைஞர்களே 2 மாதங்கள் பொறுமையாக இருங்கள் – எமது கட்சியின் ஜனாதிபதி பொறுப்பேற்றதன் பின்னர் ஒரு வருடத்திற்குள் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தை செய்து தருவோம். என நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னால் வையளயாட்டுத்துறை அமைச்சருமான மகிந்தானந்த அளுத்கமகே இன்று தெரிவித்தார்.

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அவர் கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டார். இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கின் கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். இங்கிருந்துதான் தர்ஸினி என்ற வீராங்கனையும் தெரிவானார்.

அவர் இப்போது உலக நாயகியாக சாதித்து வருகின்றார். இவ்வாறான இளைஞர்களுக்காக எமது அரசாங்கத்தினால் இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டது.

2011ம் ஆண்டு இந்த விளையாட்டு மைதானத்தின் பணிகளை நான் விளையாட்டுதுறை அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்தோம். ஆனால் எம்மால் மேற்கொள்ளப்பட்ட 50 வீதமான பணியை தவிர வேறு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை.

10 வருடங்களாக இந்த மைதானம் இவ்வாறானதாகவே உள்ளது. இந்த அரசாங்கம் என்னத்தை செய்கின்றது. நான்கரை வருடங்களாக இந்த விளையாட்டு மைதானத்தை அமைத்து மக்களிற்கு வழங்கமுடியாது போயுள்ளது.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாடாளுமன்றில் பேசுவதில்லை. அவர்கள் அங்கு எதையும் பேசமாட்டார்கள். இந்த விளையாட்டு மைதானத்தை திறந்து மக்களிற்கு வழங்க வேண்டும் என்று நான் சிறிதரனிடமும் பலமுறை பேசியுள்ளேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சிறிதரன் இருக்கின்றார். அவர்கள் எவரும் இது தொடர்பில் பேசுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்னார்.

கருத்து தெரிவிக்க