உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மஹிந்த – மைத்திரி இடையே சந்திப்பு!

இலங்கை சுதந்திரக் கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கூட்டணியை அமைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசவுள்ளார்.

அடுத்த சில நாட்களுக்குள் தனியாக இருவரும் சந்தித்து பிரச்சினைகளைத் தீ்ர்த்துக் கொள்வது குறித்து கலந்துரையாடவுள்ளனர் என சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்த்துள்ளார்.

மேலும், சில சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அடுத்த சில நாட்களுக்குள் இரு தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.

புதிய கூட்டணியை அமைப்பதற்காக பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு திட்டத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த இறுதி அறிக்கையின் அடிப்படையில், இரு கட்சிகளின் தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர். என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க