உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

தகவல் அறியும் உரிமை : மன்னாரில் விழிப்புணர்வு செயலமர்வு

தேசிய ரீதியில் நடை முறையில் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஞானோதய மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம் பெற்றது.

வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மீனவர்கள் ,மீனவ சங்க தலைவர்கள் ,மீனவதொழிலில் ஈடுபடும் பெண்கள் , இளையோர் , யுவதிகளுக்காக குறித்த தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் அது தொடர்பான நடமுறை ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

குறித்த ஆரம்ப நிகழ்வில் சட்டத்தரணி கெளமிக்கா ,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கதின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் .அன்ரனி ஜேசுதாசன் ,மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட பிரதி நிதிகள், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் நான்கு மாவட்ட செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க