உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

காணிகளை பதிவு செய்யுமாறு வலிகாமம் தெற்கு மக்களுக்கு அறிவுறுத்தல்

வலிகாம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவு செய்யப்படாத காணிகளை பதிவு செய்யுமாறும் உரிமம் கோரப்படாத காணிகளை சுவீகரிக்கப் போவதாகவும் அப்பிரதேச சபையின் தவிசாளர் க. தர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்நிலை அவர் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்டதும் 190 கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ளதும், உடுவில் உப அலுவலக எல்லைக்குட்பட்டதும், புகையிரத வீதிக்கு கிழக்குப்பக்கமாகவும் உள்ள பதிவுசெய்யப்படாது காணப்படும் காணிகள் 03.08.2019 அன்று பதிவுசெய்யப்படவுள்ளன.

அதன் அடிப்படையில் பூதவராயர் வீதி, மின்சார நிலைய வீதி மற்றும் விளாத்தியடி வீதி என்பவற்றில், உடுவில் உப அலுவலக ஆதனப்பதிவேட்டில் பதிவுசெய்யப்படாது காணப்படும் ஆதனங்களை பதிவேட்டில் பதிவுசெய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எனவே மேற்குறிப்பிட்ட வீதிகளில் உள்ள காணிகளின் சொந்தக்காரர்கள் அனைவரும் தங்கள் காணிகளின் உறுதி, காணிவரைபடம், மற்றும் அவற்றிற்கான தோம்புகள் அனைத்துடனும் 03.08.2019 ம் திகதி காலை 9.00 மணிமுதல் தங்களது காணிகளில் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள உடுவில் உபஅலுவலக பொறுப்பதிகாரியுடன்; அலுவலக நேரத்தில் (உடுவில் உபஅலுவலகம் – 021 224 4310) தொடர்பு கொள்ளுமாறும் பிரதேச சபைத் தவிசாளர்கேட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க