உள்நாட்டு செய்திகள்

கன்னியா வெந்நீரூற்று:தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்த கோரிக்கை

கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் சான்றுள்ள இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தொல்பொருள் சட்டத்தை அமுல்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது .

இதில் உரையாற்றிய போதே சுசந்த புஞ்சிநிலமே இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையை தடுத்து சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்தமையினால் எனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளது. இதற்கு எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையும் இதன் போது அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க