வெளிநாட்டு செய்திகள்

ஈரானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது கடினம் : ட்ரம்ப்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே முறுகல் நிலை உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் ஈரானில் அமெரிக்கா சார்பில் உளவு பார்த்த 17 பேரை கைது செய்ததாகவும், சிலருக்கு மரண தண்டனை அளித்ததாகவும் ஈரான் அறிவித்தது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஊடகவியலாளருக்கு  அளித்த செவ்வியில்., ” பேச்சுவார்த்தை மூலம் ஈரானுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது  முன்னரை விட இப்போது கடினம். ஈரான் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதை இன்னும் அறியவில்லை. சி.ஜ.ஏ உளவாளிகளை கைது செய்ததாக அவர்கள் கூறுவது முழுதும் வெறும் கட்டுக்கதை ” என கூறினார்.

கருத்து தெரிவிக்க