அழகு / ஆரோக்கியம்

முகத்தில் உள்ள கருமை நீங்க சில எளிய முறைகள்

வெளியில் போகும் போது முகம் வெயில் பட்டு கருமை அடைந்து விடுகிறது. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இலகுவாக கருமையை போக்கி விடலாம்.

ஓட்ஸை தூளாக்கி அதனுடன் தக்காளிச் சாறும் தயிரும் சேர்த்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் கருமை நீங்கி விடும். கிழமையில் மூன்று தரம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

தக்காளியுடன் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தாலும் கருமை நீங்கும்.

வெண்ணெயை முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும்.

வாழைப்பழத்தை மசித்து அதில் பால் சிறிது கலந்து முகத்தில் பூசலாம். ஒவ்வொரு நாளும் இரண்டு தரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் படுப்பதற்கு முன் பாலுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் கருமை நீங்கி பொலிவு பெறும்.

கருத்து தெரிவிக்க