உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரீயூனியனுக்கு இலங்கையில் இருந்து மற்றும் ஒரு அகதி படகு.

பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட இந்து சமுத்திரத்தின் ரீயூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து அகதிகள் படகு ஒன்று வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதனையடுத்து அந்த தீவின் அதிகாரிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி இந்தப்படகு இலங்கையில் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் படகு தமது தீவுக்கு வருவதற்கான தடயங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்று ரீயூனியன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு தடவைகளாக ரீயூனியனுக்கு இலங்கையில் இருந்து அகதிப்படகுகள் சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க