உள்நாட்டு செய்திகள்புதியவை

வவுனியா பேருந்து நிலையத்தில் இருவர் கைது

வவுனியாவில் இன்று முற்பகல் புதிய பேருந்து நிலையத்தில் வைத்து இருவரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற இருவரிடம் 86கிராம் மற்றும் 68கிராம் கஞ்சாவை தமது உடையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 41வயதுடைய நிஷாந்த குணரத்ன, 43வயதுடைய சுமேத ரட்நாயக்க அனுதாரபுரம் பகுதிகைளைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க