உள்நாட்டு செய்திகள்புதியவை

கன்னியா வெந்நீரூற்று பகுதி மோதல் தவிர்க்கப்பட்டது

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கன்னியாவில் வெந்நீரூற்றில் (9 கிணறுகளில்) இடம்பெறும் பூரண தின விசேட பூஜைகள் இன்று இடம்பெறவிருந்த நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.

குறித்த பகுதியில் சிங்களவர்கள் இருந்ததாகவும் இதன் காரணமாக பூஜைகள் இடம் பெறும் இடத்துக்கு செல்ல பலருக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் முன்னர் குறிப்பிடப்படுகிறது.

குறித்த பூஜைகளை மேற்கொள்ள சமயத் தலைவர்கள் இருவருக்கும் விநாயகர் கோயில் உரிமையாளர் பெண் ஒருவருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூஜைகளை மேற்கொள்ள அங்கிருந்தவர்கள் இடையூறு விளைவித்ததாகவும் அவர்கள் வெளியே வந்தபோது அங்கிருந்த இரு தரப்புக்கும் இடையே முரண்பாடுகள் இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

எவ்வாறெனினும் காவல்துறையினரின் தலையீட்டினால் மோதல் நிலை தவிர்க்க பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிடுகின்றன

கருத்து தெரிவிக்க