உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் ரஞ்சன்! ஐ.தே.கவும் கடும் எதிர்ப்பு!!

மகாநாயக்க தேரர்களையும், பௌத்த துறவிகளையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் ரஞ்ஞன் ராமநாயக்கவை உடன் கைதுசெய்யுமாறு கூட்டு எதிரணியும், சிங்கள தேசியவாத அமைப்புகளும் வலியுறுத்திவருகின்றன.

அத்துடன், பௌத்த மதத்தை சீண்டும் வகையில் அறிவிப்பு விடுத்துள்ள  ரஞ்சன் ராமநாயக்க, மண்டியிட்டு மகாநாயக்க தேரர்களிடமும்,  சிங்கள பௌத்த மக்களிடமும் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ரஞ்சனின் கருத்துக்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  இது தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் விளக்கமளிக்குமாறுகோரி கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

” ரஞ்சன் ராமநாயக்கவால் வெளியிடப்பட்டதாக கூறப்படும் கருத்தானது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. ஐக்கிய தேசியக்கட்சியும், அதன் தலைமையும் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றது.” என்றும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்தார்.

 

 

 

 

கருத்து தெரிவிக்க