உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘தாமரை அணியின் தேர்தல் அறிக்கை அக்டோபரில் வெளியாகும்’

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொடுஜன பெரமுனவின் (எஸ்.எல்.பி.பி) கொள்கை அறிக்கையானது அக்டோபர் 8 ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்படும் என்று கட்சித் தலைவர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (ஜூலை 15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த 29 புத்திஜீவிகள் அடங்கிய குழு தற்போது அறிக்கையை உருவாக்கி வருகிறது, அது இந்த மாத இறுதிக்குள் நிறைவடையவுள்ளது.

குறித்த அறிக்கை ஓகஸ்ட் முதல் இரண்டு வாரங்களில் பொது விவாதத்திற்கு முன்வைக்கப்படும் என்றும் அக்டோபரில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க