உள்நாட்டு செய்திகள்புதியவை

களுத்துறை பிரதேச சபை உறுப்பினர் உட்பட ஒன்பது பேர் கைது

மொரந்துட்டுவையில் இடம்பெற்ற இரண்டு அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக களுத்துறை பிரதேச சபை உறுப்பினர் மனோஜ் ஏகநாயக்க உட்பட 9 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அப்பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்ததாகவும், குடியிருப்பாளர்களை அச்சுறுத்தியதாகவும் காவல்துறையில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் ஏழு பெண்கள் அடங்குவர், குறித்த சந்தேகநபர்கள் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க