வெளிநாட்டு செய்திகள்

நேபாளத்தில் வெள்ளப் பெருக்கு : 43 பேர் பலி

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வீதிகள் முழுதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  வீடுகளைச் சுற்றியும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாது ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. காவற்துறையினர் நிலச்சரிவுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு  கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேபாளத்தில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க