உள்நாட்டு செய்திகள்புதியவை

சிலாபம் கடலில் அடித்து செல்லப்பட்ட குழந்தை உயிரிழப்பு

சிலாபம் கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இன்று காலை 10:45 மணியளவில் சிலாபம் கடற்கரை பூங்காவிற்கு எதிரே உள்ள கடலில் தாயும் அவரது மூன்று பிள்ளைகளும் அடித்து செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதில் ஓஷாடி சௌமியா மெத்சரணி, எனும் ஒரு வயதும் இரண்டு மாதமும் ஆன குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 43 வயதான தாய் மற்றும் அவரது 8 மற்றும் 12 வயதுடைய மகள்கள் தற்போது சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க