உள்நாட்டு செய்திகள்புதியவை

பொரலஸ்கமுவையில் போதைப்பொருளுடன் 9 பேர் கைது

பொரலஸ்கமுவ – அபேரத்ன மாவத்தையில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள் இன்று அதிகாலை  விருந்துபசார நிகழ்வொன்றின்போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து ஐஸ் போதைப்பொருளும், அதனை நுகர்வதற்காக பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் சிலவும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர்களில் மூவர் பெண்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க