உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நீண்ட வறட்சிக்கு பின் முல்லைத்தீவில் மழை – சந்தோஷத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை காலமாக நிலவிவந்த கடும் வறட்சி காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்திருந்தனர்.

வறட்சி காரணமாக நீர் நிலைகளில் நீர் வற்றியதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டதோடு கால்நடைகள் நீரின்றி பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருந்தன.

இதனடிப்படையில் மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் கூட பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் நேற்றும் இன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களிலும் மழை பெய்ய ஆரம்பித்து இருக்கின்றது.

இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க