உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஒட்டுசுட்டான் பிரதேச காணிப் பயன்பாட்டு குழு கூட்டம் இன்று நடைபெற்றது

ஒட்டுசுட்டான் பிரதேச காணிப் பயன்பாட்டு குழுக் கூட்டமானது இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு தரப்பினரால் காணி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட நிலையில் அந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அந்த காணியை வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானிக்கின்ற விசேட கூட்டமாக இந்த காணிப் பயன்பாட்டு குழுக் கூட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கூட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் அவர்களுடைய தலைமையில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் திணைக்களங்களின் உடைய அதிகாரிகள் காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் காணி கோரிக்கைகள் விடுக்கப்பட்ட இடங்கள் தொடர்பாக காணிகளை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

கருத்து தெரிவிக்க