உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

திருக்கேதீஸ்வரம் வளைவு தடை:கண்டித்து வவுனியாவில் போராட்டம்

மன்னார் திருக்கேதீஸ்வர வீதி வளைவை மீண்டும் கட்டுவதற்கு இடைக்கால தடை உத்தரவைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமைகாலை 9 .30 மணிக்கு வவுனியா கந்தசாமிகோவில் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து மாவட்ட செயலகத்தினை செனற்டைந்த போராட்டக்காரர்கள் மகஜரென்றினை அரசாங்க அதிபரூடாக அமைச்சர் மனோ கணேசனிடம் ஒப்படைப்பதற்காக மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளித்தனர்.

இக் கண்டன பேரணியை வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இந்து ஆலயங்களின் ஒன்றியம் ஏற்பாடுசெய்தமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க