உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அழுகிய நிலையில் சடலம் மீட்பு – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் இடத்தில உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசுவதை அவதானித்த அயலவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதை அவதானித்துள்ளனர்.

குறித்த வீட்டில் தனியாக வசித்துவரும் மாலதி (வயது 58) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் , குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க