உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் தொடரூந்து கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கை சேர்ந்த தொடரூந்து கடவைக்காப்பாளர்கள் இன்று வவுனியா தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும், காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமது கடமைகள் தொடரூந்து திணைக்களத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும் என கோரியே இப்போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

கருத்து தெரிவிக்க