உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

ஆறு மாதங்களின் பின்னர் மட்டு.மாவட்டத்தில் பலத்த மழை

நீண்ட இடை வெளிக்குப் பின்னர் சுமா ஆறுமாதங்களின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது.

மாலை 5.00 மணி முதல் சுமார் இரு மணித்தியாலங்கள் தொடர்ந்து கடும் மழை பெய்தது.மழை காரணமாக மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக நிலவிய கடும் வரட்சி நீங்கி குளிர்மையான காலநிலை நிலவியது.

மழை காரணமாக மக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுவதை அவதானிக்க முடிந்தது.பல வீதிகளிலும் மழை நீர் நிரம்பிக் காணப்பட்டது

கருத்து தெரிவிக்க