உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவில் விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்-துணுக்காய் வீதியின் வடகாடு பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்

நேற்று மாலை 6.50 அளவில் மாங்குளத்தில் இருந்து பாலிநகர் நோக்கி சென்ற இளைஞர்களின் வாகனம் வடகாடு பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்நிலையில் சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பாலிநகர் வவுனிக்குளத்தை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர்களான குணாளன் டிஷாந்தன் மற்றும் ஜீவகுமார் ஜினுசன் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க