உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாடசாலைகளுக்கு விவசாய பொருட்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தினால் நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் ஏழு பாடசாலைகளுக்கு பாடசாலை தோட்டங்களை அமைக்கும் பொருட்டு ஒரு தொகுதி உபகரணங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தின் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா, ஈச்சந்தீவு, மகிழவட்டவான், இருட்டுச்சோலைமடு, நாவற்காடு, விளாவட்டவான் மற்றும் பன்சேனை ஆகிய ஏழு பாடசாலைகளுக்கு தண்ணீர் பம்பிகள், தண்ணீர் குழாய்கள் மற்றும் ஒருதொகுதி பழமரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், பிரதேச செயலக திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க