உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

காமினி செனரத்துக்கு எதிரான வழக்கு: எதிர்வரும் ஆகஸ்ட் 08 இல் தீர்ப்பு

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஆகஸ்ட் 08ம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மூன்று நீதியரசர்கள் உள்ளடங்கிய நிரந்தர நீதாய நீதிமன்றத்தால் தீர்ப்பு வௌியிடப்படவுள்ளது.

இது தொடர்பான மனு சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகளால் எழுத்து மூல விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேலதிக விளக்கங்கள் இருப்பின் எதிர்வரும் 12ம் திகதி முன்வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், தீர்ப்பை எதிர்வரும் ஆகஸ்ட் 08ம் திகதி அறிவிக்க உத்தரவிட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் திகதி வரையான காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதால் பொதுச் சொத்துக்கள் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பிரதிவாதிகள் குற்றமிழைத்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு காமினி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க