உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்

வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் குழு கூட்டம் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றபோது பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அரசாங்கம் மீதான அவநம்பிக்கை பிரேரணை இந்த வாரம் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையிலேயே பிரதமர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க