உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

அரசியலுக்கு விடைகொடுக்கும் தினத்தை அறிவித்தார் மங்கள!

” இன்னும் ஐந்தாண்டுகள் மாத்திரமே செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுவேன். அதன்பின்னர் அரசியலிலிருந்து ஓய்வுபெறுவேன்.” – என்று நீதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று (07) நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

”  இறுதிமூச்சு உள்ளவரை அரசியல் களத்தில் இருக்கவேண்டும் என நான் விரும்பவில்லை. விடைகொடுக்கவேண்டிய நேரம்வரும்போது கௌரவமாக வெளியேறவே எதிர்பார்க்கின்றேன்.

அந்தவகையில் இன்னும் ஐந்து ஆண்டுகள் என்னால் அரசியலில் ஈடுபடமுடியும். எனவே, நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன். அதுவே நான் போட்டியிடும் இறுதி தேர்தலாக அமையும்.” என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

 

 

கருத்து தெரிவிக்க