உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பாம்பன் வடக்கு பகுதியில் மீனவர் நால்வரை காணவில்லை

பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்கள் மூன்று நாட்களாகியும் திரும்பாத நிலையில் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 60 க்கும் குறைவான நாட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் நால்வர் மீண்டும் திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மீனவர்கள் தொழிலுக்கு சென்று வழக்கம் போல் மறுநாள் காலை கரை திரும்பிய நிலையில் ஸ்டீபன், அந்தோனி, வின்சன்ட், சின்தாஸ் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் இன்று வரை கரைதிரும்பவில்லை .

இந்நிலையில் கரை திரும்பாத மீனவர்களை மீன்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.

எனினும் மாயமான மீனவர்கள் நிலை குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லை.

இதனால்  மினவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் குறித்த மீனவர்களை உயிரோடு மீட்டுத்தர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்க அமைப்புகள் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் கடலில் காணாமல் போன சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க