விளையாட்டு செய்திகள்

டோனி தொடர்ந்தும் விளையாட வேண்டும்-மலிங்க

உலக கிண்ண போட்டியில் சில ஆட்டங்களில் டோனி சிறப்பாக செயற்படாதது குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் அவர் ஓய்வு பெற கூடும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் தொடந்தும் விளையாட வேண்டும் என இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க தெரிவித்துள்ளார்.

‘டோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று விரும்புகின்றேன்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்டத்தை வெற்றிக்கரமாக முடிப்பதில் டோனி சிறந்தவராக விளங்கி வருகிறார்.

எதிர்காலத்தில் அவரது இந்த சாதனையை யாரும் எட்ட முடியாது. அவர் தனது அனுபவத்தையும், சூழ்நிலைக்கு தகுந்தபடி செயல்படும் பக்குவத்தையும் இளம் வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

டோனியின் நல்ல அனுபவம் இந்திய அணிக்கு அனுகூலமாக இருக்கிறது. அதனால் அவர்கள் வெற்றிகரமான அணியாக திகழ்கிறார்கள்.

இந்த உலக கிண்ண போட்டியில் எந்த அணியையும் வீழ்த்தும் திறமை மிக்க அணியாக இந்தியா விளங்கி வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஓய்வு குறித்து டோனி அளித்த ஒரு பேட்டியில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து நான் எப்பொழுது ஓய்வு பெறுவேன் என்பது எனக்கு தெரியாது.

எனினும் ஏராளமானவர்கள் இலங்கைக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு (நேற்றைய லீக் ஆட்டம்) ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்’ என்று தெரிவித்து இருந்தார்.

கருத்து தெரிவிக்க