வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் , தலிபான்கள் மோதல் : பலர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாணம் கராக் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களின் அரண்களின் மீது நேற்று தலிபான் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். படையினரும் பதில் தாக்குதல் மேற்கொண்டதில் பாதுகாப்பு படையில் 9 பேரும், தலிபான்கள் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் இருதரப்பிலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இதற்கிடையில் காந்தகார் மாகாணத்தில் உள்ள மாரோப் மாவட்டத்தில்  தலிபான்களின் பதுங்கு குழிகள் மீது நேட்டோ படையினர் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க