உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் குழு மோதலில் ஈடுபட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த பீடத்துக்கான யூனியன் நிருவாகத்தைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலையடுத்து அந்தப் பீடத்தின் மாணவர் குழுக்களிடையே கடந்த செவ்வாய்கிழமை மோதல் ஏற்பட்டது.

மோதலில் ஈடுபட்டவர்களில் 07 மாணவர்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதி பெற்று மறுநாள்  வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

இது தொடர்பில் பல்வேறு ஊடகங்களும் செய்திகளை வெளிட்ட நிலையிலேயே குறித்த மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் வாரம் அவர்களில் ஆகக் குறைந்தது 07 பேருக்கு கல்வித் தடை விதிக்கப்படுவதோடு  அவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைவதற்கும் தடை விதிக்கும் தீர்மானத்தினை பல்கலைக்கழக நிருவாகம் எடுப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும்  இந்த சம்பவம் குறித்து செய்தி சேகரித்த ஊடகவியலாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியவர்கள் தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க