உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது 11 ஆம் திகதி வாக்கெடுப்பு! கைகொடுக்கிறது கூட்டமைப்பு

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது எதிர்வரும் 10, 11 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.

11 ஆம் திகதி மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என தெரியவருகின்றது. இது குறித்தான அறிவிப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

 

கருத்து தெரிவிக்க