வெளிநாட்டு செய்திகள்

1 கோடிக்கு மேல் வங்கியில் பணம் எடுப்பவர்களுக்கு வரிவிதிப்பு

ஒருவர் ஒரே ஆண்டில் தன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 கோடிக்கு மேல் எடுப்பாரெனில் 2 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் காகித பண புழக்கத்தை குறைக்க வேண்டும் என்பதில் இந்திய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

வங்கியில் சொந்தப் பணத்தை திரும்ப எடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது என மத்திய அரசு கருதுகிறது.

இந்நிலையில் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் வரி பிடித்தம் 2 சதவீதமாக இருக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதே நேரத்தில் வர்த்தக நிறுவனங்கள் பெரிய அளவில் வங்கியில் இருந்து பணம் எடுக்கும் தேவை எழலாம் என்பதால் அவர்களுக்கு இந்த 2 சதவீத வரி பிடித்தத்தில் இருந்து விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எந்த தரப்பிற்கு குறித்த வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிப்பது என மத்திய வங்கியுடன் ஆலோசனை செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க