வெளிநாட்டு செய்திகள்

அசிங்கமா இருக்கு… கடன் வாங்கீட்டு ஓடிப்போனவன்ணு ஏன் சொல்றீங்க

லண்டன்: பிரதமர் மோடியே எனது கடனுக்காக அதிக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய நிலையில, கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பாஜக கூறுவது ஏன்? என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். கிங்க் பிஷர் மதுபான நிறுவன நிறுவனர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தின் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார், தற்போது லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையா, பாரதிய ஜனதா கட்சியினர் தன்னை கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன் என சொல்வதை கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் வாங்கிய ரூ. 9000 கோடி கடனுக்காக, இரண்டு மடங்காக அதாவது 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள என்னுடைய சொத்துக்களை இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துவிட்டார்கள்.

இதனை பிரதமர் நரேந்திர மோடியே ஒரு நேர்காணலில் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கும் போது என்னை பாஜகவின் செய்தி தொடர்பாளர், ‘கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன்’ என கூறுவது ஏன்” என தொழிலதிபர் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் 1992ம் ஆண்டில் இருந்து லண்டன் குடியுரிமை பெற்றவன் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க