உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சேருநுவர பகுதியில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு

கந்தளாய் – சேருநுவர பகுதியில் கருப்புபாலத்திற்கு அருகில் இருந்த 1892 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த தோட்டாக்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க