உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை தொடரும்!

நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த திணைக்களம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இது குறித்த தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் மாத்தறை மாவட்டத்திலும் ஓரளவு பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் நீர்கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

இதன்காரணமாக கடலை அண்டியும் கடல்சார் தொழிலில் இடுபடுவோரையும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க