உள்நாட்டு செய்திகள்புதியவை

நகர அபிவிருத்தி அதிகார சபை நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை!

ஜனாதிபதி ஆணைக்குழுவில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்று வியாழக்கிழமை முன்னிலையாகவுள்ளார்.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை சட்டரீதியாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவராமல் அரச நிதியை செலவிடுவதாக  குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், குறித்த வைத்தியசாலை அமைந்துள்ள காணி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என ஆணைக்குழுடவிடம் முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் குறித்த விசாரணைகளுக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரி அழைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க