விளையாட்டு செய்திகள்

அரையிறுதி வாய்ப்பை பெறும் பாகிஸ்தான்?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கான தகுதியை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

நாளை நடைபெறவுள்ள லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியை சிறந்த ஓட்ட சராசரியுடன் தோற்கடித்தால் அரையிறுதிக்கான வாய்ப்பு ஏற்படும்.

நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.

இதன்காரணமாக நியூசிலாந்து அணி லீக் போட்டிகள் அனைத்திலும் விளையாடி, 11 புள்ளிகளை மாத்திரம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், 9 புள்ளிகளை பெற்றுள்ளது. இது இவ்வாறு இருக்க நியூசிலாந்து அணியின் ஓட்ட சராசரியை விட பாகிஸ்தான் அணியின் ஓட்ட சராசரி குறைவாகவே உள்ளது.

இதன்காரணமாக பங்களாதேஷ் அணியுடனான இறுதி லீக் போட்டியில் சிறப்பான ஓட்ட சராசரியை பாகிஸ்தான் பெறுமாக இருந்தால் அரையிறுதிக்கான வாய்ப்பு கிடைக்கும்.

கருத்து தெரிவிக்க