சினிமா

ஆள்கடத்தல் வழக்கு பிக்பொஸ் இல்லத்தில் பொலிஸார்!

ஆள்கடத்தல் வழக்கில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை செய்ய சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் தெலங்கானா சென்றுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டில் ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதாவுக்கு ஜெயந்திகா என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டளவில் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார் வனிதா. தற்போது வனிதா விஜயகுமார் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

தந்தை ஆனந்தராஜுடன் ஜெயந்திகா தெலுங்கானாவில் வசித்து வந்தார். மகள் ஜெயந்திகாவை கடந்த பெப்ரவரி மாதம் வனிதா சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

ஆனால் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக தெலுங்கானா பொலிஸில் ஆனந்தராஜ் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட அம்மாநில பொலிஸார் வனிதா மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் வனிதாவிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழ்நாடு பொலிஸார் உதவியை நாடியது தெலுங்கானா பொலிஸ்.

பிக்பாஸ் வீடு காஞ்சிபுரம் மாவட்டம் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் உள்ள பிலிம்சிட்டி அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நசரத் பேட்டை பொலிஸாருடன் தெலுங்கானா பொலிஸார் விசாரணை நடத்த சென்று உள்ளனர்.

கருத்து தெரிவிக்க