உள்நாட்டு செய்திகள்புதியவை

ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ பதவி இராஜினாமா!

ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது இராஜினாமா குறித்த அறிவிப்பை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டதாக ரெயில்வே திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்படி, பதவி விலகல் கடிதத்தை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பி. ஜயம்பதியிடம் கையளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமை நேரத்தில் மதுபானம் அருந்தியமை தொடர்பில் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள ரயில்வே தொழிற்சங்க செயலாளர் ஒருவர் சேவையில் இருந்து நீக்கப்பட்டார்.

ஒருவரை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு சவால் விடுத்தே ரயில்வே பொது முகாமையாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க