உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஜப்பான் – இலங்கை நட்புறவு அமைப்பினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரூபா 151 மில்லியன்கள் பெறுமதியான இரு தீயணைப்பு வாகனங்கள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

பதில்கடமை புரியும் அமைச்சர் புத்திக்க பத்திரனவின் தலையீட்டில் இந்த தீயணைப்பு வாகனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளுக்குமிடையான நட்புறவு மன்றத்தை சேர்ந்த திருமதி.எரங்கா திலகரத்ன குறித்த தீயணைப்பு வாகனங்களுக்குரிய ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

ஜனாதிபதியினால் குறித்த வாகனங்கள் இலங்கை வான் படையினரின் பாவனைக்காக விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பதில் கடமை அமைச்சர் புத்திக்க பத்திரனவும் கலந்துகொண்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க