விளையாட்டு செய்திகள்

இலங்கை அணியின் உலகக் கிண்ண அரையிறுதி கனவு கேள்வி!

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் அரையிறுதி கனவு நிறைவேறுமா என்ற கேள்வி மேலும் தொடர்கிறது.

நேற்று மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டிருந்த இலங்கை வெற்றி பெற்றிருந்தாலும் புள்ளிகள் மற்றும் சராசரி ஓட்ட புள்ளிகள் அடிப்படையில் பின் தள்ளிய நிலையிலேயே உள்ளது.

தற்போதைய நிலையில், அவுஸ்ரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

இது இவ்வாறு இருக்க, இலங்கை அணி மோதவுள்ள இறுதிப் போட்டியான இந்திய அணியுடனான போட்டியில் சிறப்பான ஒரு வெற்றியை பெறுகின்ற சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மீதமுள்ள போட்டிகளில் தோல்வியை சந்திக்க வேண்டும்.

இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் இலங்கை அணிக்கு அரையிறுதி போட்டிக்கான வாய்ப்பு  ஒரளவுக்கு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க