சினிமா

கதை மாற்றியதால் படத்தில் இருந்து விலகிய தமன்னா

புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், இயக்குனர் கதையை மாற்றியதால் படத்தில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா கூறியிருக்கின்றார்.

தெலுங்கில் ராஜு காரி காதி படத்தின் 3வது பாகத்தை உருவாக்க இருக்கின்றார்கள். கதாநாயகியை சுற்றியே நகரும் கதை கொண்ட இந்த படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியிருக்கின்றார்.

படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி தமன்னா விலகியுள்ளார்.

படப்பிடிப்பு துவங்கிய பிறகு தமன்னாவிடம் தெரிவிக்காமலேயே கதை மாற்றப்பட்ட காரணத்தினால் படத்திலிருந்து விலகியுள்ளாராம்.

தமன்னா தற்போது சயீரா நரசிம்ம ரெட்டி, குயீன் படத்தின் தெலுங்கு ரீமேக், பாலிவுட் படம் என கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

கருத்து தெரிவிக்க