உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்- குமார வெல்கம

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக, கோட்டாபய ராஜபக்ச இல்லாவிடின், மீண்டும் அந்தக் கட்சியை ஆதரிக்கத் தயாராக இருக்கின்றேன் என தொலைக்காட்சி விவாதமொன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர் யார் என எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் .

நான் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும், சிறிலங்கா ஜனாதிபதியின் நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான உரிமை எனக்கு உள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய உடை அணிபவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும்.

குறித்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால் மக்களின் ஆதரவைப் பெற முடியும் என நம்புகின்றேன்” என தெரிவித்ததோடு தேசிய உடை அணிபவரே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டும்  என்று தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க