வெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் முகமாக இராணுவத்தினர் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். நேட்டோ படைகளின் உதவியோடு ஆப்கானிஸ்தான் வீரர்கள் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக வான்வழி , தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

பாக்ரியா மாகாணத்தின் கார்டாசிரா மாவட்டத்தில் உள்ள தலிபான் பயங்கரவாதிகளின் நிலைகளை  குறி வைத்து இராணுவ விமானங்கள் தாக்கின. இந்த அதிரடி தாக்குதலில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் ஆயுத கிடங்குகளும் பதுங்கு குழிகளும் நிர்மூலமாக்கப்பட்டன.

கருத்து தெரிவிக்க